விளம்பரத்தின் முக்கியத்துவம் அனைத்துப் பகுதிகளிலும் உணரப்படுகிறது. ஒரு வியாபாரம் வளர்ச்சியடைய விளம்பரம் அவசியமாகிறது. அதற்கு முக்கியமான சில காரணங்கள் கீழே விளக்கப்படுகின்றன:
1. தயாரிப்புகளை அறிமுகப்படுத்தல்:
மக்களுக்கு எளிதில் புரியக்கூடிய விளம்பரம் மூலம் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். இது வியாபாரத்தின் விற்பனையை கூட்டுகிறது.
2. தனித்தன்மை உருவாக்கல்:
மாறுபட்ட விளம்பர முறைகள் மூலம் வியாபாரம் அதே துறையில் உள்ள மற்ற வியாபாரங்களிலிருந்து தனித்தன்மை பெற முடியும். இது வாடிக்கையாளர்களின் மனதில் நீண்டநாள் நினைவில் நிற்கும்.
3. விரைவான விற்பனை
பார்த்தவுடன் வாங்க தூண்டும் படியான தூண்டுதல் விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை உடனடியாக செயல்பட வைக்க முடியும். இது விரைவான விற்பனையை ஏற்படுத்துகிறது.
4. பிராண்ட் நம்பிக்கை
பொதுவாக தற்காலிக விளம்பரங்களுக்கு பொதுமக்கள் நம்பிக்கை கொள்வது இல்லை. ஒருமுறை வரும் விளம்பரங்கள் மக்கள் மனதில் பதிவாதில்லை. தொடர்ந்து பதிவிடும் மற்றும் நேர்மையான விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற முடியும்.
5. கோட்பாடு மாற்றங்கள்:
விளம்பரங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில், வாடிக்கையாளர்களின் கோட்பாடுகளை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது வியாபாரத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவுகிறது.
6. போட்டியில் முதன்மை
வியாபார போட்டியில் முன்னணியில் இருக்கவும், மாறுபட்ட விளம்பர தந்திரங்களை பயன்படுத்துவது அவசியம். போட்டியாளர்களை கடந்து வளர சிறந்த விளம்பர தந்திரங்கள் தேவை.
7. சந்தையை புரிந்துகொள்ளுதல்
புதியா புதிய விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை தெரிந்துகொள்ள முடியும். இது வெற்றிகரமான வியாபாரத் திட்டங்களை அமைக்க உதவுகிறது.
8. புதிய விற்பனைகளை ஆராய்தல்:
விளம்பரங்கள் மூலம் புதிய விற்பனை தளங்களையும், விற்பனை பொருட்களையும் ஆராய முடியும். இது வியாபாரத்தின் வியாபார களத்தை விரிவாக்குகிறது.
விளம்பரத்தின் முக்கியதுவம்
சிறந்த விளம்பரம் ஒரு வியாபாரத்தின் முதன்மையான விஷயமாகும். இது வியாபாரம் வளர்ச்சியடைய முக்கிய பங்களிப்பை ஆற்றுகின்றது. எனவே, ஒரு தொழிலதிபர் தன் வியாபாரத்தை மேம்படுத்த விரும்பினால், விளம்பரத்தில் விரும்பிய அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும். புதிய புதிய விளம்பரங்களால் மங்கள எண்ணங்களை கவர்ந்து தன் பொருட்களை மக்கள் மனதில் பதிவேற்ற வேண்டும்.
உங்கள் வீட்டில் பெரியவர்களுக்கு 70 வயது ஆகிவிட்டதா ? அவர்களின் மருத்துவ செலவு உங்களை பயமுறுத்துகிறதா ? கவலை வேண்டாம் : மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி 70 வயது கடந்த அனைத்து.பெரியவர்களுக்கும் 5 இலட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கபடுகிற...
பென்ஷன் பெருபவர்கள் வருடந்தோறும் சமர்பிக்க வேண்டிய வாழ்நாள் சான்று பதிவு செய்துதரபடும். ஆதாரில் விரல் ரேகை சரியாக விழவில்லை என்றாலும் கண்விழி மூலம் இங்கு வாழ்நாள் சான்று பதிவு செய்து தரபடும். வீட்டிலிருந்து வரமுடியாத முதியோர்களுக்கு அவர்களின் இல்லம...
பென்ஷன் சம்பந்தமானவேலைகள் ஓய்வூதிய கணக்கைசரிபார்க்கவும், ஓய்வூதிய கணக்கில் உள்ள தகவல்கள் சரிபார்த்து திருத்தவும், ஓய்வூதியகணக்கில் இருந்து முன்பணம் பெறுதலும் போன்ற வேலைகளுக்கு விண்ணப்பம் செய்து தரபடும். வேறு கம்பெனியில்இருந்து நீங்கள் புது கம்பெ...
உங்களின் விளைநிலம், காலிமனையிடம் மற்றும் வீடு போன்றவற்றின்பட்டா உங்கள் பெயருக்கு மாற்றிட அரசின் ஆன்லைன் விண்ணப்பம் செய்து தரபடும். தேவையான ஆவனங்கள் : அசல் பத்திரம் தாய் பத்திரம் வில்லங்க சான்றிதழ் பழைய பட்டா மேலும் நாங்கள் வில்லங்க சான்றிதழ் இடத்தின...